கேரளாவில் வந்தே பாரத் விரைவு ரயிலால் மற்ற ரயில்கள் தாமதம் என பயணிகள் குற்றச்சாட்டு : பயணிகள் கருப்பு மாஸ்க் அணிந்து போராட்டம்
Nov 20 2023 3:14PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கேரளாவில் வந்தே பாரத் விரைவு ரயிலால் மற்ற ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாகக்கூறி பயணிகள் கருப்பு மாஸ்க் அணிந்து போராட்டம் நடத்தினர். கேரளாவில் வந்தே பாரத் விரைவு ரயில் சேவையை சமீபத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த ரயில் மற்ற ரயில்களை காட்டிலும் 2 மணி நேரம் முன்கூட்டியே செல்லும் என்பது சிறப்பம்சமாகும். இந்த நிலையில், எர்ணாகுளத்தில் வந்தே பாரத் விரைவு ரயிலால் மற்ற ரயில்கள் தாமதமாக இயக்கப்படுவதாக கூறி ரயில்வே துறைக்கு எதிராக பயணிகள் முகத்தில் கருப்பு நிற மாஸ்க் அணிந்து போராட்டம் நடத்தினர்.