ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனையற்ற ஜாமீன் : அரசியல் பணிகளில் ஈடுபட அனுமதி வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவு
Nov 20 2023 5:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திறன் மேம்பாட்டு கழக முறைகேடு வழக்கில் ஆந்திர முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு நிபந்தனையின்றி ஜாமீன் வழங்கி ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2014 முதல் 2019ம் ஆண்டு வரை ஆந்திர மாநில முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இருந்தார். இந்த காலகட்டத்தில் மாநில திறன் மேம்பாட்டு நிதியில் முறைகேடு நடந்ததாக கூறி அவர் கைது செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஆந்திரா உயர்நீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு ஜாமீன் கோரி மனுதாக்கல் செய்த நிலையில் 4 வார இடைக்கால மருத்துவ ஜாமீன் வழங்கப்பட்டது. இந்நிலையில் இடைக்கால ஜாமீன் நவம்பர் 28ம் தேதியுடன் நிறைவடையுள்ள நிலையில், அவருக்கு நிபந்தனையற்ற ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் தேர்தல் பணிகளில் பங்கேற்க விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை நீக்கியும் அணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.