உத்தரகண்ட் சுரங்க விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் - எதிர்க்கட்சித் தலைவரான காங்கிரசின் யஷ்பால் ஆர்யா வலியுறுத்தல்
Nov 21 2023 10:37AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகாண்ட் சுரங்க விபத்து தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான யஷ்பால் ஆர்யா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், சம்பவம் நடைபெற்று 9 நாட்கள் ஆன நிலையில், ஊழியர்கள் இன்னும் மீட்கப்படவில்லை என்றார். கட்டுமான தளத்தில் சுரங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான வழி ஏன் அமைக்கப்படவில்லை என்பதை கண்டறிய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை என்று கூறினார். களத்தில் உள்ள மீட்பு படையினருக்கு முழு ஆதரவை வழங்குவதாகவும் இதனை அரசியலாக்க விரும்பவில்லை எனத் தெரிவித்தார்.