உத்தர்காசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் எப்போது மீட்கப்படுவார்கள் என்பதை உறுதியாக கூற முடியாது : கிறிஸ்துமஸ்க்குள் எப்போது வேண்டுமானாலும் மீட்கப்படலாம் என மீட்பு குழுவின் தலைவரும், பேராசிரியருமான அர்னால்ட் டிக்ஸ் தகவல்
Nov 21 2023 1:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் சுரங்கப் இடிபாடுகளில் சிக்கித்தவிக்கும் தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் மீட்கப்படலாம் என மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர்.
உத்தரகாசியில் யமுனோத்ரியை இணைக்கும் வகையில் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெற்றது. கடந்த 12ம் தேதி மலையை குடையும்போது, சுரங்கத்தின் ஒரு பகுதியில் பாறைகள் உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், அங்கிருந்த 41 தொழிலாளர்கள் சுரங்குத்திற்குள் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் அதிகாரிகள் 10 நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு முதல்முறையாக நேற்று குழாய் மூலம் உணவுகள் மற்றும் மருந்து பொருட்கள் அனுப்பப்பட்டன. இதனிடையே சுரங்கத்திற்குள் சிக்கிய தொழிலாளர்களின் முதல் வீடியோ காட்சி தற்போது வெளியாகியுள்ளது. குழாய் மூலம் அனுப்பப்பட்ட எண்டோஸ்கோபிக் ஃப்ளெக்ஸி கேமரா மூலம் இந்த காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. தொழிலாளர்களை வாக்கி-டாக்கி மூலம் தொடர்புகொள்ளும் முயற்சியில் மீட்புப் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் அவர்களை மீட்கும் பணியில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே அவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் மீட்கப்படலாம் என மீட்புகுழுவினர் தெரிவித்துள்ளனர்.