மத்தியப் பிரதேசம் மாநிலம் குவாலியரில் பெட்ரோல் பங்க் அருகே இருசக்கர வாகனத்தில் கடத்தப்பட்ட பெண் மீட்பு : லாட்ஜ் ஒன்றிலிருந்து மீட்கப்பட்டதாக காவல்துறை தகவல்
Nov 21 2023 1:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்தியப்பிரதேசம் மாநிலம் குவாலியரில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்று பைக்கில் கடத்தப்பட்ட பெண் விடுதியில் இருந்து மீட்கப்பட்டுள்ளார்.
பிந்த் பகுதியை சேர்ந்த 19 வயது கல்லூரி மாணவி, குவாலியர் பகுதியில் பேருந்தில் இருந்து இறங்கி அங்கிருந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் தனது சகோதரனுக்காக காத்திருந்தார். அப்போது, முகமூடி அணிந்த இருவர், அந்த இளம்பெண்ணை இருசக்கர வாகனத்தில் அமரவைத்து கடத்திச் சென்றனர். இந்தக் காட்சிகள் வைரலானதை தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில், குணா பகுதியில் உள்ள விடுதியில் இருந்து அந்த இளம்பெண் மீட்கப்பட்டுள்தாகவும், இதுதொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.