டெல்லி விமான நிலையத்தில் cool drinks அட்டைக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட ரூ.2 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல் : 4 கிலோ தங்கத்தை எடுத்துவந்த நபரிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை
Nov 21 2023 6:49PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி விமான நிலையத்தில் 2 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். சுங்கத் துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து, டெல்லி விமான நிலையத்தில் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது, சந்தேகப்படும்படியாக பாங்காக்கில் இருந்து வந்த விமானப் பயணியிடம் அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில், cool drinks அட்டையிக்குள் மறைத்து எடுத்துவரப்பட்ட 2 கோடியே 24 லட்சம் ரூபாய் மதிப்பிலான 4 கிலோ 200 கிராம் எடையுள்ள தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.