உலகிலேயே மிகபிரம்மாண்ட மணற்கோட்டை வடிவமைப்பு - கின்னஸ் சாதனையில் இடம்பிடித்தார் இந்தியாவின் மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்

Feb 11 2017 7:55AM
எழுத்தின் அளவு: அ + அ -

இந்தியாவின் புகழ்பெற்ற மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், உலகின் மிக பிரம்மாண்ட மணற்கோட்டையை வடிவமைத்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், பிரபல அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் பல்வேறு மணற்சிற்பங்களை வடிவமைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். 50-க்கும் மேற்பட்ட சர்வதேச மணற்சிற்ப சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ள அவருக்கு, கடந்த 2014-ம் ஆண்டு உயரிய விருதான பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. மணற்சிற்பத்தில் தனிமுத்திரைப் பதித்துவரும் வரும் சுதர்சன் பட்நாயக், பூரி கடற்கரையில் "உலக அமைதி" என்ற தலைப்பில் 48 அடி உயர பிரம்மாண்ட மணற்கோட்டையை வடிவமைத்துள்ளார். 9 நாட்களில் 45 மாணவர்களின் உதவியுடன் சுதர்சன் பட்நாயக், இந்த மணற்சிற்பத்தை உருவாக்கியுள்ளார். இதன்மூலம், கின்னஸ் சாதனையில் இடம்பிடித்துள்ள பட்நாயக், கடந்த 2015-ம் ஆண்டு மியாமி கடற்கரையில் 45 அடி உயரத்தில் மணற்சிற்பம் வடிவமைத்த அமெரிக்க கலைஞரின் சாதனையை முறியடித்துள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00