புதுச்சேரி ஜிப்மர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் ஓவிய கண்காட்சியில், 500-க்கும் மேற்பட்ட படைப்புகள் இடம் பெற்றுள்ளன
Mar 24 2017 1:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜிப்மர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், ஓவியக் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இதில், ஜிப்மர் பேராசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த ஓவியர்கள் என 250-க்கும் மேற்பட்டோர் வரைந்த 500-க்கும் மேற்பட்ட ஓவியங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஓவியங்கள் மருத்துவர்களை மட்டுமின்றி, சிகிச்சைக்காக வரும் நோயாளிகளையும் வெகுவாகக் கவர்ந்து வருகிறது. 26-ம் தேதி வரை நடைபெறும் இக்கண்காட்சியில், சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, பரிசுகள் வழங்கப்படவுள்ளன. இந்தக் கண்காட்சி, தங்களுக்கு மழு அழுத்தத்தலிருந்து விடுதலை தரும் வகையில் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.