மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடுகள் நடைபெற்றதாக தொடரப்பட்ட வழக்கு - தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
Mar 24 2017 6:37PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தலின்போது வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்துள்ள புகார் தொடர்பான வழக்கில் விளக்கம் அளிக்கும்படி, தலைமை தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
உத்திரபிரதேசம், பஞ்சாப், மணிப்பூர், உத்தரகாண்ட், கோவா ஆகிய 5 மாநிலங்களில் அண்மையில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளில் முறைகேடு நடைபெற்றதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி, டெல்லி முதலமைச்சர் திரு.அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக S.L.சர்மா என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் புகார் குறித்து விளக்கம் அளிக்கும்படி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.