புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை எரித்த பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சரிடம் மனு
Mar 24 2017 7:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொடியை எரித்த பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதலமைச்சரிடம் மனு அளிக்கப்பட்டது.
புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பத்திரிகையாளர்களை விமர்சித்ததாகக் கூறி அதற்கு கண்டனம் தெரிவித்து, பாரதிய ஜனதா கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தின் போது கம்யூனிஸ்ட் கட்சியின் கொடி தீ வைத்து எரிக்கப்பட்டது. இதையடுத்து, அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இந்நிலையில், பாரதிய ஜனதா கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நேற்று இரவு கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பெரிய கடை காவல்நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. பின்னர், புதுச்சேரி முதலமைச்சரை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகள் தங்களது கட்சிக் கொடியை எரித்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனு அளித்தனர்.