உத்தரப்பிரதேசத்தில் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண் அனுமதிக்கப்பட்ட அவசர சிகிச்சை பிரிவு அறையில் செல்ஃபி எடுத்துக் கொண்ட மூன்று பெண் காவலர்கள் சஸ்பெண்ட்
Mar 25 2017 10:28AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரப்பிரதேச மாநிலம் மதுரா அருகே, 18 வயது பெண்ணை 3 இளைஞர்கள் பாலியல் கொடுமைக்குள்ளாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த பெண் மீது இளைஞர்கள் ஆசிட் வீசியுள்ளனர். இதில் முகம் உள்ளிட்ட இடங்களில் படுகாயமடைந்த அந்த பெண், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள அந்த பெண்ணின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனிடையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, மூன்று பெண் காவலர்கள் பாதுகாப்புக்கு அளித்தனர். அப்போது, மூவரும், செல்ஃபி எடுத்துக் கொண்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர்களை சஸ்பெண்ட் செய்து அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.