டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் பலி : தீயை அணைக்கும் பணிகள் தீவிரம்
Mar 25 2017 10:32AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் பிளாஸ்டிக் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். தீயை அணைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
டெல்லி நரேலாவில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதனால் அப்பகுதி, மக்கள் நடமாட்டத்துடன் பரப்பரப்பாகவே உள்ளது. இந்நிலையில், அங்குள்ள ஒரு பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், சம்பவ இடத்திற்கு 32 தீயணைப்பு வாகனங்கள் விரைந்தன. தீ கொழுந்துவிட்டு எரிந்ததால் அப்பகுதியே புகைமண்டலமாக காட்சியளித்தது. தீ பரவாமல் தடுக்கும் பணிகள் முதலில் மேற்கொள்ளப்பட்டன. தொழிற்சாலையில் இருந்த ஊழியர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். விபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார். தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர். டெல்லியில் தொழிற்சாலை பகுதியில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக பரபரப்பு ஏற்பட்டுள்ளது.