மகாராஷ்ட்ராவில், 5 நாட்களாக நீடித்த மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்தது - பணிநேர பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை திரும்பப் பெற்றனர் மருத்துவர்கள்
Mar 25 2017 10:34AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மகாராஷ்ட்ராவில், 5 நாட்களாக நீடித்த மருத்துவர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு உறுதியளித்ததால், மருத்துவர்கள் தங்கள் வேலைநிறுத்தத்தை கைவிட்டு நேற்றிரவுமுதல் பணிக்கு திரும்பியுள்ளனர்.
மும்பை மருத்துவமனையில் மருத்துவர் ஒருவர் தாக்கப்பட்டதை கண்டித்தும், மருத்துவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வலியுறுத்தியும், மகாராஷ்ட்ர மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் கடந்த 5 நாட்களாக வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், மகாராஷ்ட்ர மாநிலம் முழுவதும் மருத்துவ சேவை பாதிக்கப்பட்டு நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இதற்கு ஆதரவாக, மருத்துவ ஆசிரியர்கள் சங்கத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில், கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு உறுதியளித்ததை அடுத்து, வேலைநிறுத்தத்தை கைவிட்ட மருத்துவர்கள், நேற்றிரவுமுதல் மீண்டும் பணிக்கு திரும்பினர்.