கடற்படை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த குஜராத்தில் இருந்து புறப்பட்ட கார் பேரணி புதுச்சேரி வந்தடைந்தது - கடற்படை அதிகாரி அலோக் பட்னாகர் வரவேற்பு
Mar 25 2017 11:12AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடற்படை தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த குஜராத்தில் தொடங்கிய கார் பேரணி இன்று புதுச்சேரி வந்தடைந்தது. பேரணியில் இடம் பெற்றவர்களை கடற்படை அதிகாரி அலோக் பட்னாகர் வரவேற்றார்.
குஜராத்தில் உள்ள வல்சுறா கடற்படை பயிற்சி நிறுவனத்தின் பவள விழா ஆண்டை கொண்டாடும் வகையில், கடற்படை குறித்த விழிப்புணர்வை மக்களிடம் ஏற்படுத்த கடற்படை அதிகாரிகள் கலந்து கொண்ட கார் பேரணி குஜராத்தில் தொடங்கியது. மொத்தம் 6ஆயிரம் கிலோ மீட்டர் பயண தூரம் உள்ள இந்த கார் பேரணி மகாராஷ்டிரா, கோவா, கர்நாடகா, கேரளா வழியாக இன்று காலை புதுச்சேரி வந்தடைந்தது. இந்த பேரணியை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை தளபதி அலோக் பட்நாகர் வரவேற்று, பின்னர் சென்னை செல்லும் வழியில் பேரணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை செல்லும் இந்த கார் பேரணி ஆந்திரா வழியாக குஜராத்தை திரும்பிச் சென்றடையவுள்ளது. இதில் கலந்து கொண்ட கடற்படை அதிகாரிகள் ளபள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே கடற்படை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.