சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து செயல்பட இந்தியா - அமெரிக்கா ஒப்புதல் - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அமெரிக்க உயரதிகாரிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு
Mar 25 2017 12:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பாதுகாப்புத் துறை ஆலோசகர் அஜித் தோவல், அமெரிக்க உயரதிகாரிகளை சந்தித்து, பேசியுள்ள நிலையில், இரு நாடுகளும் சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைந்து பாடுபடுவது என ஒப்புக் கொண்டன. மேலும், தெற்காசியதாவில் அமைதியை நிலைநாட்ட இந்தியா மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் திரு.அஜித் தோவல் மேற்கொண்டுள்ள அமெரிக்க பயணத்தின்போது, அந்நாட்டு பாதுகாப்புத் துறை செயலாளர் ஜேம்ஸ் என் மேட்டிஸை சந்தித்துப் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினார். சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக இரு நாடுகளும் ஒன்றிணைந்து செயல்படுவது என அப்போது ஒப்புக் கொள்ளப்பட்டது. தெற்காசியாவில் அமைதியை வலுப்படுத்த இந்தியா மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா பாராட்டு தெரிவித்ததாக அந்நாட்டு பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் கேப்டன் Jeff Davis தெரிவித்தார். திரு.தோவல் அமெரிக்க உள்துறை செயலாளர் ஜான் கெல்லி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர் மற்றும் பாதுகாப்புத் துறைக்கான நாடாளுமன்றக் குழுத் தலைவர் ஜான் மெக்கைன் ஆகியோரையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இரு நாடுகளிடையே ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது குறித்தும், விரிவு படுத்துவது பற்றியும் இந்த பேச்சுவார்த்தையின் போது விவாதிக்கப்பட்டது. தோவல் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டங்களில் இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் நவ்தேஜ் சர்னாவும் கலந்துகொண்டார்.