தெலங்கானா சட்டப்பேரவை வளாகத்தில் காவல்துறை அதிகாரியை தரக்குறைவாகப் பேசிய காங்கிரஸ் முன்னாள் எம்.பி. அனுமந்த ராவ் கைது
Mar 25 2017 12:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா சட்டப்பேரவை வளாகத்தில், காவல்துறை அதிகாரியை தரக்குறைவாகப் பேசிய காங்கிரஸ் முன்னாள் எம்.பி. திரு. அனுமந்த ராவ் கைது செய்யப்பட்டார். அவர் போலீசாரால் தூக்கிச் செல்லப்பட்ட காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் சட்டசபை நடந்து கொண்டிருக்கும் போது காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்பி திரு. அனுமந்த ராவ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது, காவல்துறை அதிகாரி ஒருவரை பற்றி தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. அப்போது, போலீசார் அவரை தடுக்க முற்பட்டபோது, அவர்களை போலீசாரை கடுமையான விமர்சித்ததுடன், தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அனுமந்தராவை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று வேனில் ஏற்றினர். இந்த வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.