புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மருத்துவரின் அலட்சியத்தால் அரசுப் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்ததாகக் கூறி உறவினர்கள் மருத்துவமனையில் முற்றுகை
Mar 26 2017 5:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி அரசு மருத்துவமனையில் மருத்துவரின் அலட்சியத்தால் அரசுப்பேருந்து ஓட்டுநர் உயிரிழந்ததாக கூறி அவரது உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர்.
புதுச்சேரி டி.என்.பாளையம் மாரியம்மன் கோவில் வீதியை சேர்ந்த அரசுப் பேரந்து நடத்துனர் இளஞ்செழியன். கடந்த வெள்ளிக்கிழமை வயிற்று வலி காரணமாக அங்குள்ள அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று காலை திடீரென அவர் உயிரிழந்தார். இதுகுறித்து மருத்துவமனை ஊழியர்கள் உரிய தகவல் அளிக்கவில்லை என்றும், மருத்துவரின் கவனக்குறைவே உயிரிழப்பிற்கு காரணம் என்று கூறி ஓட்டுநரின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படாததால் , போராட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.