தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட் 9 செயற்கைக்கோள் வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது : இறுதிக்கட்ட பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரம்
Apr 27 2017 12:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெற்காசிய நாடுகளுக்கான ஜிசாட் 9 செயற்கைக்கோள் வரும் 5-ம் தேதி விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
தெற்காசிய நாடுகளின் பயன்பாட்டிற்காக ஜிசாட் 9 செயற்கைக்கோளை இஸ்ரோ விஞ்ஞானிகள் தயாரித்துள்ளனர். தெற்காசிய மண்டல நாடுகளில் பாகிஸ்தானை தவிர, மற்ற நாடுகளின் கூட்டுத்திட்டத்தில் இந்த செயற்கைக்கோள் உருவாக்கப்பட்டுள்ளது. 2 ஆயிரத்து 230 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைக்கோள், தகவல் தொடர்புக்கு உதவும் 12 கே.யு. பேண்ட் கருவிகளை சுமந்து செல்கிறது. இதன் ஆயுட்காலம் 12 ஆண்டுகளாகும். தெற்காசிய நாடுகளில் உள்ள பகுதிகளில் பேரழிவு தொடர்பான தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும் வல்லமை கொண்ட இந்த செயற்கைக்கோள், வரும் 5-ம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. எஃப் பூஜ்யம் 9 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படுகிறது. இதற்கான இறுதிக்கட்ட பணியில் இஸ்ரோ விஞ்ஞானிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.