புதுச்சேரியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை

Apr 27 2017 4:28PM
எழுத்தின் அளவு: அ + அ -

புதுச்சேரி நயினார் மண்டபம், சுதான நகர் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 20க்கும் மேற்பட்ட கார் உள்ளிட்ட வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்ட சம்பவம் குறித்து முதலியார்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுச்சேரி முதலியார்பேட்டை தொகுதிக்குட்பட்ட சுதான நகர், தென்னஞ்சாலை வீதி, சுகாதார ஊழியர் குடியிருப்பு, கந்த முதலியார் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில், வீடுகளின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களின் கண்ணாடிகளை நேற்று நள்ளிரவில் மர்ம நபர்கள் கல்வீசி உடைத்துள்ளனர். இதில் சுமார் 20க்கும் மேற்பட்ட கார்களின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. சேதமடைந்த கார்களில் விலை உயர்ந்த கார்களும் அடங்கியுள்ளதால், பாதிக்கப்பட்டவர்கள் முதலியார்பேட்டை காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இதையடுத்து சேதமடைந்த கார்களை ஆய்வு செய்த காவல்துறையினர், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்புக் கேமராக்களின் பதிவுகளை வைத்து விசாரணையை போலீசார் முடுக்கிவிட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00