பாகிஸ்தானின் ஐந்தாவது மாகாணமாக Gilgit-Baltistan-ஐ அறிவிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜம்மு-காஷ்மீரில் பெண்கள் போராட்டம்
Apr 27 2017 4:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
காஷ்மீர் ஆக்கிரமிப்பு பாகிஸ்தான் பகுதியில் Gilgit-Baltistan பகுதிகளை ஒன்றிணைத்து ஐந்தாவது மாகாணம் உருவாக்குவதற்கு ஏதுவாக, பாகிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் கொண்டு வர அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதனிடையே, ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், பதாகைகள் ஏந்தி பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். காஷ்மீரின் சில பகுதிகளை துரதிஷ்டவசமாக பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ளதாகவும் பெண்கள் குற்றம்சாட்டினர். எனவே பாகிஸ்தான் தனது முடிவை கைவிட வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.