மஹாராஷ்டிரா மாநிலத்தின் அருகே உள்ள காகித தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து : பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பல்
Apr 27 2017 6:13PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மஹாராஷ்டிரா மாநிலத்தின் அருகே உள்ள காகித தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் தொழிற்சாலையில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் எரிந்து சாம்பலாகின.
மஹாராஷ்டிரா மாநிலம் Aurangabad-Solapur நெடுஞ்சாலையில் காகித தொழிற்சாலை ஒன்று உள்ளது. இங்கு ஊழியர்கள் இன்று வழக்கம்போல் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தொழிற்சாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பேப்பர் தொழிற்சாலை என்பதால் தீ வேகமாக பரவி தொழிற்சாலை முழுவதும் தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு 15 தீயணைப்பு வண்டிகளில் விரைந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.