இந்தியா-போலாந்து இடையே விவசாயம், வணிகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின
Apr 27 2017 8:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
3 நாட்கள் அரசு முறை பயணமாக போலாந்து சென்றுள்ள இந்திய துணை குடியரசு தலைவர் திரு.Hamid Ansari, அந்நாட்டு பிரதமர் Beata Szydlo சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகளிடையே விவசாயத்துறை தகவல் மற்றும் தொழில்நுட்பத்தை பரிமாறிக்கொள்வது, வணிக உறவை விரிவுபடுத்துவது உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஓப்பந்தங்கள் கையெழுத்தாகின. பாதுகாப்பு துறை , சுரங்கம், உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயலாற்றுவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.