மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடிப்பதே இலக்கு என்ற பா.ஜ.க. தலைவரின் பேச்சுக்கு அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதிலடி - டெல்லியையும் சேர்த்து கைப்பற்றுவோம் என சவால்
Apr 28 2017 12:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லி மாநகராட்சி தேர்தல் வெற்றியை அடுத்து, மேற்குவங்கத்தில் ஆட்சி அமைப்பதே பாரதிய ஜனதாவின் அடுத்த இலக்கு என கூறியிருந்த அமித்ஷாவுக்கு, டெல்லியையே கைப்பற்றுவோம் என மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்துள்ளார்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, மேற்குவங்க மாநிலத்தில் 3 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து அங்கு அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அமித்ஷா, பாரதிய ஜனதாவை பார்த்து மம்தா பானர்ஜி பயப்படுவதாகவும், தங்கள் கட்சியின் வளர்ச்சி அவரை மிரளவைத்துள்ளதாகவும் கூறினார். மேலும், மேற்குவங்கத்தில் ஆட்சியை பிடிப்பதே தங்களின் அடுத்த இலக்கு என்றும் அமித்ஷா தெரிவித்தார். இந்நிலையில், அமித்ஷாவின் பேச்சுக்கு மம்தா பதிலடி கொடுத்துள்ளார். திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை பாரதிய ஜனதா அச்சுறுத்த முயற்சிப்பதாகவும், நாங்கள் டெல்லியையே கைப்பற்றுவோம் என்றும் மம்தா பானர்ஜி சவால் விடுத்துள்ளார்.