பல கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட பாகுபலி 2 - ரசிகர்கள் உற்சாகம் - பட்டாசு வெடித்து மகிழ்ச்சி
Apr 28 2017 3:47PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பல கோடி ரூபாய் பொருட்செலவில் பிரம்மாண்டமாய் உருவாக்கப்பட்டுள்ள பாகுபலி -2 திரைப்படம் இன்று உலகத் திரையரங்குகளில் திரையிடப்பட்டது. சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திரையிடப்பட்ட பாகுபலி 2 திரைப்படத்தை ரசிகர்கள் உற்சாகமாக கண்டுகளித்து வருகின்றனர்.
பாகுபலி 1 வெற்றியைத் தொடர்ந்து, பெரும் செலவில் உருவாக்கப்பட்ட பாகுபலி 2 திரைப்படம் உலகெங்கிலும் திரையிடப்பட்டுள்ளது.
சென்னையில் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ள இத்திபை்படத்தைக் காண ரசிகர்கள் குவிந்துள்ளனர். ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநில மக்களிடையேயும் பாகுபலி-2 திரைப்படம் பெரும் ஆவலை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத் நகரில் பாகுபலி திரைப்படத்தை காண வந்த ரசிகர்கள், பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதேபோல், பெங்களூரு உள்ளிட்ட நகரங்களிலும், முதல் காட்சியைக் காண ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர்.
பாகுபலி முதல்பாகம் இந்தியாவில் சுமார் 4 ஆயிரம் திரையரங்குகளில் வெளியானது. அதை மிஞ்சும் அளவுக்கு பாகுபலி-2, சுமார் 8 ஆயிரத்திற்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகிறது. மேலும், அமெரிக்காவில் அதிக திரையரங்குகளில் வெளியாகி சாதனை படைத்துள்ளது.