கோவா, பஞ்சாப் சட்டப்பேரவை மற்றும் டெல்லி மாநகராட்சி தேர்தல் தோல்வி எதிரொலி - ஆம் ஆத்மி கட்சி தலைமை மீது நிர்வாகிகளும், எம்.எல்.ஏக்களும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் - கட்சியைவிட்டு யாரும் போக வேண்டாம் என அரவிந்த் கெஜ்ரிவால் வேண்டுகோள்
Apr 28 2017 11:05AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி தலைமை மீது நிர்வாகிகள் சிலர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படும் நிலையில், கட்சியைவிட்டு யாரும் போக வேண்டாம் என எம்.எல்.ஏ.க்களுக்கு கெஜ்ரிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அண்மையில் நடந்து முடிந்த டெல்லி மாநகராட்சித் தேர்தலில், ஆளும் ஆம் ஆத்மி கட்சி படுதோல்வியைச் சந்தித்தது. இதனால், கட்சி நிர்வாகிகள் சிலர் ஒவ்வொருவராக விலகத் தொடங்கி உள்ளனர். சில எம்.எல்.ஏ.க்களும் விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்துள்ள முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கவுன்சிலர்களை அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இதில் பஞ்சாப், கோவா மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஏற்பட்ட தோல்வி மற்றும் ஆளுங்கட்சியாக இருந்தும் டெல்லி மாநகராட்சி தேர்தலில் வெற்றி வாய்ப்பு பறிபோனது போன்றவைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிகிறது.
அந்தக் கூட்டத்தில் பேசிய கெஜ்ரிவால், மக்களுக்கும், நமக்கும் இடையே உள்ள இடைவெளியையே இந்த தோல்விகள் உணர்த்துவதாகவும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை வாங்க பா.ஜ.க. முயற்சிக்கிறது என்றும் குற்றம்சாட்டினார். மேலும், எம்.எல்.ஏ-க்கள் யாரும் விலைபோகி விடக்கூடாது என கேட்டுக் கொண்ட திரு. கெஜ்ரிவால், இதுதொடர்பாக அனைவரிடமும் உறுதிமொழி பெற்றதாகவும் கூறப்படுகிறது.