பஞ்சாப்பில் மேம்பாலத்திலிருந்து நிலைதடுமாறிய லாரி தடுப்பு சுவரை உடைத்துக்கொண்டு கீழே விழும் பதற வைக்கும் காட்சிகள் வெளியீடு
Apr 28 2017 3:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
பஞ்சாப் மாநிலம் Jalandhar-ல் உள்ள ஒரு மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்த லாரி ஒன்று யாரும் எதிர்பாராத விதமாக திடீரென பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துகொண்டு கீழே விழுந்தது. அப்போது, பாலத்திற்கு கீழ் ஆட்டோ ரிக்சாவில் சென்று கொண்டிருந்தவர், சுதாரித்துக்கொண்டு அங்கிருந்து தப்பியதால் நூலிழையில் உயிர் தப்பினார். அடுத்த நொடியே லாரி, ஆட்டோ ரிக்ஷாவின் மீது விழுந்து நொறுங்கியது. இந்த விபத்தில் லாரி ஓட்டுநரும், ஆட்டோ ரிக்ஷா ஓட்டுனரும் படுகாயமடைந்தனர். படுகாயமடைந்த இருவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவான இந்த காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.