ஜம்மு-காஷ்மீரில் குப்வாரா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடலுக்கு ஸ்ரீநகரில் இறுதிமரியாதை செலுத்தப்பட்டது

Apr 28 2017 5:52PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஜம்மு-காஷ்மீரில் குப்வாரா எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் உடலுக்கு ஸ்ரீநகரில் இறுதிமரியாதை செலுத்தப்பட்டது.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், குப்வாரா மாவட்ட எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டு பகுதியில் உள்ள ராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் நேற்று திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் கேப்டன் Ayush Yadav உட்பட இந்திய ராணுவத்தினர் 3 பேர் வீர மரணம் அடைந்தனர். 5 வீரர்கள் காயம் அடைந்தனர். இந்திய ராணுவம் நடத்திய பதிலடி தாக்குதலில் இரண்டு தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு ராணுவ முறைப்படி இறுதி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி ஸ்ரீநகரில் நடைபெற்றது. கேப்டன் ஆயுஷ் யாதவ் மற்றும் வெங்கட ரமணா, பூப் சிங் ஆகியோரது உடல்களுக்கு ராணுவ வீரர்கள் மற்றும் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து இறுதி மரியாதை செலுத்தினர்.

உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் திரு. அகிலேஷ் யாதவ், உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உத்தரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த கேப்டன் ஆயுஷ் யாதவ் குடும்பத்தாருக்கு அம்மாநில அரசு 30 லட்சம் ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00