ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி நடைமுறைப்படுத்த இறுதிப் பணிகள் நடைபெற்று வருவதாக நிதி அமைச்சர் அருண் ஜெய்ட்லி தகவல்
Apr 28 2017 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜூலை 1-ம் தேதி முதல் சரக்கு மற்றும் சேவை வரி நாடு முழுவதும் நடைமுறைக்கு வரவுள்ள நிலையில், அற்கான இறுதிப் பணிகள் நடைபெற்று வருவதாக நிதி அமைச்சர் திரு. அருண் ஜெய்ட்லி தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே சீரான வரியை அமல்படுத்தும் நோக்கில், GST எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதாவை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ஜி.எஸ்.டி. வரிவிதிப்பை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
டெல்லியில் இன்று நடைபெற்ற இந்திய தொழில் கூட்டமைப்பின் ஆண்டு கூட்டத்தில் கலந்தகொண்ட திரு. அருண் ஜெய்ட்லி, சரக்கு மற்றும் சேவை வரி அமல்படுத்துவதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். மேலும், சரக்கு மற்றும் சேவை வரி மூலம் நுகர்வோர் பயனடைவர் எனத் தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியும் அரை சதவீதம் உயரும் என்று கூறினார். கடந்த 14 ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் இருந்து வந்த சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.