ஜம்மு-காஷ்மீரில் வங்கி ஒன்றிக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற தீவிரவாதி கைது : தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் CRPF வீரர் படுகாயம்
Apr 28 2017 5:58PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு-காஷ்மீரில் வங்கி ஒன்றிக்குள் புகுந்து கொள்ளையடிக்க முயன்ற தீவிரவாதி ஒருவர் கைது செய்யப்பட்டார். தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் CRPF வீரர் ஒருவர் படுகாயமடைந்தார்.
பாகிஸ்தான் ராணுவம் மற்றும் அந்நாட்டு உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ-யால் பயிற்சி பெறும் தீவிரவாதிகள் காஷ்மீர் வழியாக ஊடுருவி நாசவேலைகளில் ஈடுபடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அவ்வாறு ஊடுருவும் தீவிரவாதிகளை வேட்டையாடும் பணியில் ராணுவத்துடன் இணைந்து எல்லை பாதுகாப்பு படையினர் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் Anantnag மாவட்டத்தில் உள்ள வங்கி ஒன்றிக்குள் புகுந்த தீவிரவாதிகள் 2 பேர் சராமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் CRPF வீரர் ஒருவர் படுகாயமடைந்தார். இதனைதொடர்ந்து வங்கியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினர் தீவிரவாதி ஒருவரை கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு தீவிரவாதியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.