மேற்குவங்கத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே கடும் மோதல் : காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசி, தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு
Apr 30 2017 10:22AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மேற்குவங்க மாநிலத்தில் பாஜக மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரிடையே ஏற்பட்ட மோதலில், காவல்துறையினர், கண்ணீர் புகை குண்டு வீசி, தடியடி நடத்தியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேற்குவங்க மாநிலம் Howrah பகுதியில் உள்ள காவல்நிலையத்துக்கு வெளியே, பாரதிய ஜனதா கட்சித் தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் ஒருவரை, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நபர் ஒருவர் தாக்கியதாக கூறியும், அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. அப்போது, போராட்டக்காரர்கள், தகாத வார்த்தைகளை பேசியதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சிச் தொண்டர்கள் குற்றம்சாட்டினர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே, ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, கைகலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, கலவரத்தை கட்டுக்குள் கொண்டுவர, காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டு வீசினர். மேலும் போராட்டக்காரர்களை விரட்ட காவல்துறையினர் தடியடி நடத்தியதால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியது.