சத்தீஸ்கரில் மத்திய ராணுவப்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்திய விவகாரம் - தேடுதல் வேட்டையில் மாவோயிஸ்டு ஒருவர் கைது

Apr 30 2017 10:29AM
எழுத்தின் அளவு: அ + அ -

சத்தீஸ்கர் மாநிலத்தில் மத்திய ராணுவப்படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதை அடுத்து, தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், மாவோயிஸ்டு ஒருவரை கைது செய்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றிற்கு பாதுகாப்புக்காக சென்ற மத்திய ரிசர்வ் படை வீரர்கள் மீது மாவோயிஸ்டுகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 4 பேர் உள்பட 25 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை ஒடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனிடையே, தாக்குதல் நடத்தப்பட்ட பகுதிகளில் காவல்துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வரும் நிலையில், மாவோயிஸ்டு ஒருவரை கைது செய்துள்ளனர். மேலும் தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இதனிடையே, தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியில், 15 நாட்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில், ஜர்கண்ட் மாநிலம் Dumka பகுதி காவல் நிலையத்தில், இரண்டு மாவோயிஸ்டுகள் சரண் அடைந்தனர். சட்டவிரோத செயலில் ஈடுபட்டு வந்த மாவோயிஸ்ட் குழுவுடன் தொடர்பு கொண்டிருந்த இவர்கள், தற்போது அதிலிருந்து விலகி மனம் திருந்தி வாழ விரும்புவதாக தெரிவித்தனர். இதையடுத்து மாவோயிஸ்டுகளுக்கு வெகுமதியாக 50 ஆயிரம் ரூபாய் பணத்தை, காவல்துறையினர் அளித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00