புதுச்சேரி முதலமைச்சரின் நிதி அதிகாரங்களை திரும்பப்பெறும் வகையில் துணைநிலை ஆளுனர் கிரண்பேடி நடவடிக்கை மேற்கொண்டிருப்பது அங்குள்ள ஆட்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி
Jun 23 2017 5:06PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி முதலமைச்சரின் நிதி அதிகாரங்களை திரும்பப்பெறும் வகையில் துணைநிலை ஆளுனர் கிரண்பேடி நடவடிக்கை மேற்கொண்டிருப்பது, அங்குள்ள ஆட்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி சட்டப்பேரவையில், அமைச்சரவைக்கு கூடுதல் அதிகாரம் அளிக்க சட்டத்தில் திருத்தம் கொண்டுவர தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் நிர்வாகி என்ற முறையில் துணைநிலை ஆளுனர் கிரண்பேடி, 3 மாதங்களுக்கு முன்னர், முதலமைச்சருக்கான நிதி ஆதாரங்களை ரத்து செய்து உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அவர் பிறப்பித்த உத்தரவுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லை. எனினும், ஆளுனர் கிரண்பேடி தனது செயல்பாட்டை நியாயப்படுத்தியுள்ளார்.
ஆளுனரின் இந்த உத்தரவு நடைமுறைக்கு வந்தால் புதுச்சேரி முதலமைச்சர் திரு. நாராயணசாமியால், எந்த திட்டத்துக்கும் நிதி ஒதுக்க முடியாத நிலைஏற்படும். அதே நேரத்தில் ஆளுனர் கிரண்பேடிக்கு 50 கோடி ரூபாய் வரை நிதி செலவிடும் அதிகாரம் கிடைத்துவிடும். மேலும், அமைச்சர்களும் தங்கள் துறைச்செயலாளர்கள் மூலம் 2 கோடி ரூபாய் செலவிடும் உரிமையை இழந்து விடுவர். புதுச்சேரி ஆளுனருக்கும், அரசு தரப்புக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிவரும் சூழலில், முதலமைச்சரின் நிதி ஆதாரங்களை பறிக்கும் முயற்சியில், ஆளுனர் இறங்கியுள்ள சம்பவம் அங்குள்ள ஆட்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.