ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு வழங்கக்கோரி பிஹாரில் போராட்டம் - Sharif ரயில் நிலையத்தை ஆர்ப்பாட்டக்காரர்கள் சூறையாடியதால் பதற்றம்
Jun 23 2017 10:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு வழங்க கோரி பிஹாரில் உள்ள ரயில் நிலையம் ஒன்றை போராட்டக்காரர்கள் சூறையாடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய ரயில்வே துறையில் வேலை வழங்கக்கோரி, பிஹாரில் உள்ள Sharif ரயில் நிலையத்திற்குள் புகுந்த போராட்டக்காரர்கள், அங்கு நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை தீயிட்டு கொளுத்தினர். முன்பதிவு அறை, பார்சல் அலுவலகம் ஆகியவற்றிக்குள் நுழைந்த அக்கும்பல், அங்கிருந்த மேஜை, நாற்காலிகளை அடித்து உடைத்து சூறையாடியதுடன் ரொக்க பணத்தையும் திருடிச் சென்றது. இந்த தாக்குதலில் ரயில்வே ஊழியர்கள் சிலர் காயம் அடைந்தனர். தப்பியோடிய கும்பலை தேடும் பணி நடைபெற்று வருகிறது. தாக்குதலில் ஈடுபட்டவர்கள் ராஷ்ரிய ஜனதா தள கட்சியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. இச்சம்பவத்தால் ரயில் நிலையம் போர்க்களம் போன்று காட்சியளித்தது.