நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 17ம் தேதி தொடக்கம் - ஆகஸ்ட் 11-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு
Jun 24 2017 12:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்ற மழைக்காலத் கூட்டத் தொடர் அடுத்த மாதம் 17-ம் தேதி தொடங்கும் என்று நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு அறிவித்துள்ளது. இக்கூட்டத் தொடர் ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சரவையின் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுக் கூட்டம் உள்துறை அமைச்சர் திரு.ராஜ்நாத் சிங் தலைமையில் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரை எப்போது தொடங்குவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. பின்னர் வெளியிடப்பட்ட அறிவிப்பில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 17ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் 11ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.