தேசிய ஜனநாயக கூட்டணி குடியரசு தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நாளை முதல் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் - நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு திரட்டுகிறார்
Jun 24 2017 5:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள திரு. ராம்நாத் கோவிந்த், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்டு நாளை முதல் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
குடியரசு தலைவர் திரு. பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது. இதனையடுத்து புதிய குடியரசு தலைவரை தேர்ந்தேடுப்பதற்கான தேர்தல் ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில், திரு. ராம்நாத் கோவிந்த் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குடியரசு தலைவர் தேர்தலில் வாக்களிக்க உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களிடம் ஆதரவு கேட்டு திரு.ராம்நாத் கோவிந்த், நாளை முதல் நாடு முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்க உள்ளார். நாட்டிலேயே அதிக நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் இருந்து திரு.ராம்நாத் கோவிந்த் தனது சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.