டார்ஜிலிங் முழு அடைப்பு போராட்டத்தில் வன்முறை - போலீஸ் வாகனத்திற்கு தீ வைத்ததால் பரபரப்பு

Jun 26 2017 10:15AM
எழுத்தின் அளவு: அ + அ -

டார்ஜிலிங் முழு அடைப்பு போராட்டத்தின் போது போலீஸ் வாகனத்திற்கு தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேற்குவங்கத்தின் டார்ஜிலிங் உள்ளிட்ட பகுதிகளை பிரித்து கூர்காலாந்து என்ற பெயரில் தனி மாநிலம் அமைக்கக்கோரி கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர் கடந்த 12-ந்தேதி முதல் காலவரையற்ற முழு அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளதுடன், அங்கு அடிக்கடி வன்முறையும் வெடித்து வருகிறது. இதில் ஏராளமான போலீசார் மற்றும் பொதுமக்கள் காயமடைந்து உள்ளனர்.

டார்ஜிலிங் நகரில் 15-வது நாளாக போராட்டம் இன்றும் நீடித்து வருகிறது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது, அலாக்ரா பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த போலீஸ் வாகனத்தில் சந்தேகத்திற்கிடமான கூர்கா படையினர் தீ வைத்தனர் என போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதேபோன்று ரம்மம் நீர்மின்திட்டத்திற்கு சொந்தமான பத்துக்கும் அதிகமான வாகனங்களில் தீ வைத்து, அலுவலகத்திற்கு பூட்டு போட்டனர்.

இதனிடையே மேற்கு வங்கத்தில் வசிக்கும் கூர்காவினர் களத்தில் இறங்கி போராட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும் சிடிக்களை கூர்கா ஜனமுக்தி மோர்ச்சா அமைப்பினர் வழங்கினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00