முன்னாள் சபாநாயகர் மீரா குமார் பற்றி மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சுவாரஸ்சியமான வீடியோ ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்
Jun 26 2017 11:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
குடியரசுத்தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள முன்னாள் சபாநாயகர் மீரா குமார் பற்றி மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் சுவாரஸ்சியமான வீடியோ ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பீகார் மாநிலத்தின் ஆளுநராக இருந்த ராம்நாத் கோவிந்த்தை, பாரதிய ஜனதா கூட்டணி, குடியரசுத்தலைவர் வேட்பாளராக நிறுத்தியுள்ளது. அவருக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சார்பில் குடியரசுத்தலைவர் வேட்பாளராக முன்னாள் சபாநாயகர் மீரா குமார் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவரைப் பற்றி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சுவாரஸ்சியமான வீடியோ ஒன்றினை தனது டுவிட்டர் பக்கத்தில் தற்போது பதிவிட்டுள்ளார்.
கடந்த 2013-ம் ஆண்டு மீராகுமார் மக்களவை சபாநாயகராக இருந்தபோது, சுஷ்மா சுவராஜ் பேச முற்படுவதும், அதனை மீராகுமார் தடுக்க முயன்று இடையூறு செய்வதுமான வீடியோ பதிவுதான் இது.
நடுநிலையாக இருந்து செயல்பட வேண்டிய ஒரு சபாநாயகர், பொறுப்பான பதவியில் இருந்து கொண்டு இப்படித்தான் செயல்பட்டார் என்றும், தனது 6 நிமிட உரையில் 60 முறை குறுக்கிட்டார் என்றும், திருமதி. சுஷ்மா ஸ்வராஜ் குறிப்பிட்டுள்ளார்.