அமர்நாத் யாத்திரைக்கான ஏற்பாடுகள் தயார் - தீவிரவாதிகள் அச்சுறுத்தலின்றி பக்தர்கள் வரலாம் என ஜம்மு காஷ்மீர் அரசு உறுதி
Jun 26 2017 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அமர்நாத் புனித யாத்திரைக்கு எந்தவித தீவிரவாத அச்சுறுத்தலும் இல்லை என தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் துணை முதலமைச்சர் திரு. நிர்மல் சிங், யாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள அமர்நாத் குகைக் கோயிலில், ஆண்டுதோறும் இயற்கையாகத் தோன்றும் பனிலிங்கத்தை தரிசிப்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் புனித யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த ஆண்டுக்கான யாத்திரை, வரும் 29-ம் தேதி தொடங்கி, ஆகஸ்ட் மாதம் 7-ம் தேதி நிறைவடைகிறது. யாத்திரையின்போது, பொதுமக்களின் பாதுகாப்புக்காக ஜம்மு காஷ்மீர் போலீசாரைத் தவிர, துணை ராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 30 ஆயிரம் வீரர்கள் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இந்நிலையில், அமர்நாத் புனித யாத்திரைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ள ஜம்மு காஷ்மீர் துணை முதலமைச்சர் திரு. நிர்மல் சிங், யாத்திரைக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளதாக கூறியுள்ளார்.