ஜிஎஸ்டி சட்ட நிறைவேற்ற கூட்டத்தை எதிர்கட்சிகள் புறக்கணிக்கவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் யெச்சூரி பேட்டி - நாடாளுமன்ற நள்ளிரவு சிறப்பு கூட்டம் தொடர்பாக கொறடா உத்தரவு பிறப்பிக்கவில்லை என்றும் தகவல்
Jun 26 2017 5:04PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜிஎஸ்டி சட்டத்தை நிறைவேற்ற வரும் 30-ம் தேதி நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள சிறப்பு நள்ளிரவுக் கூட்டத்தை எதிர்கட்சிகள் புறக்கணிக்கவில்லை என்று கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் திரு. சீதாராம் யெச்சூரி, இது தொடர்பாக கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் ஒரே விதமான வரிவிதிப்பை கொண்டு வருவதற்கான ஜி.எஸ்.டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. இது குறித்து கடந்தவாரம் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் திரு. அருண் ஜேட்லி, இந்தியா விடுதலை பெற்றபிறகு, முதல்முறையாக நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பு முறை ஜி.எஸ்.டி. சட்டத்தின் மூலம் அமலுக்கு வருவதாக தெரிவித்தார். மேலும், நாடே எதிர்பார்க்கும் இந்த சட்டத்தை நிறைவேற்ற வரும் 30-ம் தேதி நாடாளுமன்ற சிறப்பு நள்ளிரவு கூட்டம் நடைபெறும் என்றும் அவர்கூறினார்.
இதனிடையே, ஜி.எஸ்.டி. அறிமுக விழாவை புறக்கணிக்க எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளதாக தகவல் பரவியது. இந்நிலையில், நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ள சிறப்பு நள்ளிரவுக் கூட்டத்தை எதிர்கட்சிகள் புறக்கணிக்கவில்லை என்று கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் திரு. சீதாராம் யெச்சூரி, இது தொடர்பாக கொறடா உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளார்.