காஷ்மீரின் அனந்த்நாக், ராஜ்போரா, புல்வாமா உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் - சரமாரி கல்வீச்சு : வன்முறை கும்பலைக் கலைக்க பெல்லட் குண்டுகளைப் பயன்படுத்தி பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பலர் படுகாயம்

Jun 26 2017 7:23PM
எழுத்தின் அளவு: அ + அ -

காஷ்மீர் மாநிலத்தின் சோப்போர், அனந்த்நாக், ராஜ்போரா, சோஃபியான் உள்ளிட்ட பல பகுதிகளில், பாதுகாப்புப் படையினரை நோக்கி, சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்புப் படையினர், கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியதோடு, Pellet குண்டுகளைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதால், 10 பேர் காயமடைந்தனர்.

காஷ்மீர் மாநிலத்தில் ரமலான் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஸ்ரீநகரின் Hazratbal மசூதியில், 50 ஆயிரம் பேர் தொழுகை மேற்கொண்டனர். அங்குள்ள ஈத்கா திடலில் பல்லாயிரக்கணக்கானோர் தொழுகை மேற்கொண்டனர். புனித ரமலானையொட்டி, அனந்தநாக் மாவட்டத்தில், பாதுகாப்புப்படை வீரர்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர்.

இந்நிலையில், சோப்போர், அனந்த்நாக், ராஜ்போரா, சோஃபியான், குல்கம், புல்வாமா உள்ளிட்ட பல இடங்களில், பாதுகாப்புப் படையினரை எதிர்த்து, கற்களை வீசி கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. காவல்துறையினர் கண்ணீர் புகைக்குண்டுகளை வீசி, வன்முறைக் கும்பலை கலைத்தனர். Pellet குண்டுகளைக் கொண்டு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00