வியட்நாம் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணை விற்பனை செய்யப்பட்டதாக வெளியான செய்திக்கு இந்தியா மறுப்பு
Aug 19 2017 7:39AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வியட்நாம் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணை விற்பனை செய்யப்பட்டதாக வெளியான செய்திக்கு இந்தியா மறுப்பு தெரிவித்துள்ளது.
Roll Visual
தென்சீனக் கடல் பகுதியில் உள்ள சில தீவுகளை சொந்தம் கொண்டாடுவதில் பிலிப்பைன்ஸ், வியட்நாம், சீனா ஆகிய நாடுகளுக்கிடையே பிரச்சனைகள் இருந்து வருகின்றன. இப்பிரச்சனை தொடர்பாக சர்வதேச தீர்ப்பாயத்தில் சில வழக்குகளும் நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், டோக்லாம் பகுதியில் இந்தியா மற்றும் சீனா இடையேயான பிரச்சனை நீடித்துவரும் நிலையில், வியட்நாம் நாட்டிற்கு இந்தியா ஆதரவளித்து வருவதாகவும், வியட்நாமிற்கு பிரமோஸ் ஏவுகணைகளை இந்தியா விற்றுள்ளதாகவும் செய்தி பரவியது.
இதனை திட்டவட்டமாக மறுத்துள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம், இந்த செய்தி உண்மைக்கு மாறானது என தெரிவித்துள்ளது.