சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கோசாலையில் பராமரிப்பு இல்லாததால் கடந்த ஒரு வாரத்தில் 100-க்‍கும் மேற்பட்ட பசுக்‍கள் உயிரிழந்துள்ளன

Aug 19 2017 10:13AM
எழுத்தின் அளவு: அ + அ -

சத்தீஸ்கர் மாநிலம் தர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்புர் கிராமத்தில் அரசியல் பிரமுகர் ஒருவர் நடத்தி வரும் கோசாலையில், 26 ஆயிரம் கால்நடைகள் பராமரிக்‍கப்பட்டு வருகின்றன. இந்த கோசாலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும், முறையான பராமரிப்பு இல்லாமல் 100-க்‍கும் மேற்பட்ட பசுக்‍கள் உயிரிழந்துள்ளன. இதனையடுத்து, கோசாலையின் அருகே குழி தோண்டப்பட்டு, இறந்த பசுக்‍களை யாருக்கும் தெரியாமல் புதைக்க நடவடிக்‍கை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த கிராம மக்‍கள் போராட்டம் நடத்தினர். இதனையடுத்து கால்நடைத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர். போதிய உணவு மற்றும் சரியான மருத்துவ சிகிச்சை இல்லாததே மாடுகளின் இறப்புக்கு காரணம் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00