ப்ளூ வேல் இணைய விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

Aug 21 2017 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -

ப்ளூ வேல் இணைய விளையாட்டில் ஈடுபட்ட கல்லூரி மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நூற்றுக்கணக்கான வெளிநாட்டு மாணவர்களின் உயிர்களை தொடர்ந்து காவு வாங்கும் ப்ளூ வேல்' எனப்படும் ஆன்லைன் விளையாட்டு இந்தியாவில் இப்போது பரவலாகி வருகிறது. இந்தியாவிலும் சில பகுதிகளில் மாணவர்கள் சிலர் இந்த விளையாட்டால் தங்கள் உயிரை இழந்துள்ளனர். எனவே, இந்த விளையாட்டை சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்க வேண்டும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. இந்நி‌லையில், கேரளாவை சேர்ந்த ஆஷிக் என்ற கல்லூரி மாணவர் இந்த விளையாட்டால் தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை ஆய்வு செய்தபோது, அவரது கையில் திமிங்கலத்தின் உருவம் வரையப்பட்டிருந்தது. மேலும் அவரது செல்போனை பார்த்த போது, கைகளில் ரத்தக்காயம் ஏற்படுத்தியது, கடலில் நின்று செல்பி எடுப்பது, வீட்டின் மாடியில் இருந்து குதிப்பது, கல்குவாரி மேல் நிற்பது போன்ற படங்கள் இருந்தன. இவை அனைத்தும் 'ப்ளூ வேல்' விளையாட்டின் சவால்கள் என்பதால், ஆஷிக்கும் அந்த விளையாட்டில் ஈடுபட்டு, இறுதியில் தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதே விளையாட்டால் திருவனந்தபுரத்தை சேர்ந்த மனோஜ், கண்ணனூரை சேர்ந்த சவாந்த் ஆகிய மாணவர்கள் ஏற்கனவே தற்கொலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00