தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பொறியாளர் ஒருவர் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து திரவ எரிபொருட்களை உருவாக்கி சாதனை
Aug 21 2017 12:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பொறியாளர் ஒருவர் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்து திரவ எரிபொருட்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார். எந்திரவியல் பொறியாளரான இவர், குப்பைகளில் வீசப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை சேகரித்து, அதனை மறுசுழற்சி செய்து வருகிறார். இதன்மூலம் திரவ எரிபொருட்களை உருவாக்கி அவர் சாதனை படைத்துள்ளார். இந்த பிளாஸ்டிக் கழிவுகள் மூன்று முறை மறுசுழற்சிக்குட்பட்டு, வேதி மாற்றங்கள் செய்வதன் மூலம் இந்த எரிபொருள் கிடைப்பதாக சதீஸ்குமார் தெரிவித்துள்ளார். அவரின் இந்த கண்டுபிடிப்பை பலரும் பாராட்டி வருகின்றனர்.