கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 586 ரெயில் விபத்துகள் நிகழ்ந்திருக்கின்றன - பாதிக்கும் மேல் ரெயில் தடம் புரண்டதால் ஏற்பட்டவை : ஆய்வுகள் தகவல்

Aug 21 2017 1:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 586 ரெயில் விபத்துகள் நிகழ்ந்திருப்பதாகவும், இவற்றில், பாதிக்கும் மேல் ரெயில் தடம் புரண்டதால் ஏற்பட்டவை என்றும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

உத்தர பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் பகுதியில் உட்கல் எக்ஸ்பிரஸ் ரெயில் தரம் புரண்ட விபத்தில் 24 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கணக்கானோர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்துக்‍கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் 586 ரெயில் விபத்துகள் நிகழ்ந்துள்ளதாகவும், அதில் பாதிக்கு மேல் ரெயில் தடம் புரண்டதால் ஏற்பட்டவை என்றும் புள்ளி விவர அடிப்படையிலான ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதில் கடந்த ஆண்டு கான்பூர் அருகில் நடைபெற்ற விபத்துதான் மிகமோசமானது என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

அதைத்தொடர்ந்து பல்வேறு மோசமான ரயில் விபத்துகளும் நிகழ்ந்துள்ளன. பா.ஜ.க அரசு ரயில்வே துறையில் போதிய அக்‍கறை செலுத்தாததே இந்த ரயில் விபத்துக்‍கு காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00