இந்தியா - சீனா இடையே நிலவும் டோக்லாம் எல்லை பிரச்னைக்கு, விரைவில் தீர்வு காணப்படும் : மத்திய உள்துறை அமைச்சர் தகவல்
Aug 22 2017 2:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்தியா - சீனா இடையே நிலவும் டோக்லாம் எல்லை பிரச்னைக்கு, விரைவில் தீர்வு காணப்படும் என, மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
டெல்லியில், இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படையினரின் நிகழ்ச்சியில், மத்திய உள்துறை அமைச்சர் திரு. ராஜ்நாத் சிங் பங்கேற்றுப் பேசினார். அப்போது, நாட்டின் எல்லையை காக்கும் நம் வீரர்கள், எவ்வகை அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளும் திறன் படைத்தவர்கள் என்றார். அண்டை நாடுகளுடன், இணக்கமான போக்கை கடைப்பிடிக்கவே, இந்தியா விரும்புகிறது என்றும், சிக்கிம் எல்லையை ஒட்டியுள்ள டோக்லாம் பகுதியில், விரைவில் இயல்புநிலை திரும்பும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். டோக்லாம் எல்லை குறித்து, இந்தியா - சீனா இடையே நிலவும் பிரச்னைக்கு தீர்வு காணப்படும். இந்த விவகாரம் தொடர்பாக, சீனா, விரைவில் நல்ல முடிவு எடுக்கும் என, நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.