உ.பி.யில் மீண்டும் ரயில் தடம் புரண்டு விபத்து - 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் - மீட்புப் பணிகள் தீவிரம்
Aug 23 2017 8:52AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
உத்தரபிரதேசத்தில் மீண்டும் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகினற்ன.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே கைஃபியாத் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. அதிகாலை 2.30 மணியளவில் கான்பூரை அடுத்த ஹவுரையா என்ற இடத்தில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 10 ரயில் பெட்டிகள் கவிழ்ந்ததாகவும், 50க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
4 நாட்களுக்கு முன் முஸாஃபர் நகர் அருகே கலிங்கா எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில் 23 பேர் உயிரிழந்துள்ள நிலையல், மீண்டும் ஒரு ரயில் விபத்து நடைபெற்றிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.