INX Media நிறுவனம் அந்நிய முதலீடு மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கு - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் ஆஜர்

Aug 23 2017 12:49PM
எழுத்தின் அளவு: அ + அ -

INX Media நிறுவனம் அந்நிய முதலீடு மோசடியில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில், முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் ஆஜரானார்.

காங்கிரஸ் கட்சியின் ப.சிதம்பரம் மத்திய நிதி அமைச்சராக இருந்த போது INX Media நிறுவனம் அந்நிய முதலீடுகளை பெற அனுமதி வழங்கப்பட்டது. இந்த அனுமதி முறைகேடானது என கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவித்த சி.பி.ஐ ,அந்நிய முதலீடுகளை பெற்ற INX Media நிறுவனம் அதற்கு கைமாராக ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரத்திற்கு தொடர்புடைய நிறுவனங்களில் பலகோடி ரூபாய் முதலீடு செய்ததாக குறிப்பிட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த சி.பி.ஐ சென்னை, மும்பை, டெல்லி உள்ளிட்ட 14 இடங்களில் அதரடி சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை கைப்பற்றியது.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. மேல்முறையீட்டை ஏற்றுக்‍ கொண்ட உச்சநீதிமன்றம் கார்த்தி சிதம்பரத்தை சி.பி.ஐ விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டது. இதனையடுத்து இன்று டெல்லியில் உள்ள சி.பி.ஐ தலைமை அலுவலகத்தில் கார்த்தி சிதம்பரம் ஆஜரானார். அவரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 0000.00 Rs. 0000.00
மும்பை Rs. 0000.00 Rs. 0000.00
டெல்லி Rs. 0000.00 Rs. 0000.00
கொல்கத்தா Rs. 0000.00 Rs. 0000.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 00.00 Rs. 00000.00
மும்பை Rs. 00.00 Rs. 00000.00
டெல்லி Rs. 00.00 Rs. 00000.00
கொல்கத்தா Rs. 00.00 Rs. 00000.00