ஜம்மு காஷ்மீரில் ஒரு சிறையில் சோதனை செய்த போது 20-க்கும் மேற்பட்ட செல்போன்கள் மற்றும் இதர பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்
Aug 23 2017 1:46PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள ஒரு சிறையில் சோதனை செய்த போது 20க்கும் மேற்ப்பட்ட செல்போன்கள் மற்றும் இதர பொருட்களை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சிறைகளில் சிறைத்துறை அதிகாரிகள் அவ்வபோது திடீரென சோதனை நடத்துவது வழக்கம். அந்தவகையில், Baramulla மாவட்டத்தில் உள்ள சிறை ஒன்றில் சிறைத்துறை அதிகாரிகள் திடீரென மேற்கொண்ட சோதனையில் சிறையில் கைதிகள் பயன்படுத்தி வந்த 20க்கும் மேற்பட்ட செல்போன்கள், ஜார்ஜர் மற்றும் இதர பொருட்களை சிறைத்துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து அனை அனைத்தும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதுகுறித்து அதிகாரிகள் எப்ஐஆரும் பதிவு செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.