புதிய 200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்துவதற்கான அரசாணையை வெளியிட்டது மத்திய அரசு - செப்டம்பர் முதல் புழக்கத்திற்கு வரும்என தகவல்
Aug 23 2017 5:19PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதிய 200 ரூபாய் நோட்டை அறிமுகப்படுத்துவதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி வரும் செப்டம்பர் முதல் இந்த புதிய 200 ரூபாய் நோட்டுக்கள் புழக்கத்திற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக அச்சிடப்பட்டுள்ள 200 ரூபாய் நோட்டுகள் ஆகஸ்ட் மாத கடைசி வாரம் அல்லது செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் புழக்கத்திற்கு வர உள்ளது. இதற்கான அரசாணையை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி சுமார் 50 கோடி ரூபாய் அளவிற்கு இந்த புதிய 200 ரூபாய் நோட்டை அச்சிட்டு வைத்துள்ளதால், இந்தியாவில் நடைபெறும் பணப் புழக்கத்தைச் சரியாகக் கண்காணிக்க முடியும் என்பது மட்டுமல்லாமல், கள்ள சந்தை மற்றும் கருப்புப் பணத்தை முறையாக ஒழிக்க முடியும் என நம்பப்படுகிறது. மேலும் மக்கள் மத்தியில் இந்த ரூபாய் நோட்டுகளை முழுமையாகக் கொண்டு சேர்க்க அனைத்து விதமான பணிகளையும் செய்துள்ளோம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரண்டாயிரம் மற்றும் 500 ரூபாய்க்கு ஏற்பட்ட பற்றாக்குறை இந்த முறை இருக்காது என்றும், அதிமாக 200 ரூபாய் நோட்டுக்கள் பொதுமக்கள் வசதிக்காக அச்சிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.